Pages

Friday, February 22, 2013

கண்ணதாசன் பொன்மொழிகள்



·         தேவைப்பட்டாலொழியக்    கோபம்  கொள்ளாதே.

·         நன்மை    செய்தவனுக்கு  நன்றி  காட்டு.


·         தீமை  செய்தவனை  மறந்து  விடு.


·         எதையும்  சாதிக்க  நிதானம், அற்புதமான  ஆயுதம்.


·         வென்றவனுக்கு  மலையும்  கடுகு. தோற்றவனுக்கு  கடுகும்  மலை.

·         ஆணவமும்அழிவும்  இறைட்டைக்  குழந்தைகள்.

·         அற்ப  ஆசைகள்  பெரிய  வெற்றியைத்  தேடித்  தருவதில்லை.

·         சோம்பி  நிற்கும்  மனிதனிடம்  துன்பங்கள்  உற்ப்பத்தியாகின்றன.

·         தாய்ப்பால்  கொடுக்காத  குழந்தைகளுக்கு  தாய்ப்பாசம்  இருக்காது.

·         இலக்கியங்கள்  எல்லாம்  மனிதர்களுடைய  அனுபவத்தில்  உதித்தவையே.

·         நீயாகவே  முடிவு  செய். நீயாகவே  செயல்  படு.

·         முடிந்தால்  நன்மை  செய். தீமை  செய்யாதே.

·         சினிமா-பயன்  படுத்த  தெரிந்தவனுக்கு  அற்புதமான  ஆயுதம்.

·         சிறு  வயதில்  வரவு  வையுங்கள்பெரிய  வயதில்  செலவளிங்கள்.

·         நம்  மனதளவு  எவ்வளவோ அவ்வளவு  தான்  உலகம்.

·         வாழ்வில்  நகைச்  சுவை  வேண்டும். சிரிக்காதவன்  மிருகம்.

·         அருங்குறள்  1330-ம்  கடலளவுஅதன்  முன்  உலகம் கடுகளவு.

·         வாழ்ககையின்  ஒவ்வொரு  அணுவையும்  அனுபவிக்க  வேண்டும்.

·         எதையும்  தெரியாது  என்று  சொல்லாமல்  தெரியுமென  சொல்.

·         வாழ்வில்  துணிவு   வேண்டும்.

·         விதி  என்னும்  மூலத்தில்  இருந்து   முளைத்த  கிளையே  மதி.

·         காற்றுள்ள  போதே  தூற்றிக்கணும்  என்பதை  கவனத்தில்  வை.

·         வாழ்க்கையில்  முன்னேற  எந்த  விமர்சனத்தையும்  தாங்கிக்கொள்.

·         திறமை  உள்ளவனுக்கு  வாய்ப்பு  தூரமில்லை.


1 comment: